பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
டைரக்டர் கவுதம் மேனனுக்கும், அஜீத்துக்கும் இடையே எழுந்த மோதலால் அஜீத்துக்காக தயார் செய்த துப்பறியும் ஆனந்த் கதையில், சில மாற்றங்களை செய்து அதில் விஜய்யை ஹீரோவாக்கி, அந்தபடத்திற்கு "யோஹன்- அத்தியாயம் ஒன்று" என்ற பெயரிட்டுள்ளார் கவுதம். அசல் படத்திற்கு பிறகு அஜீத், கவுதம் மேனன் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது. இப்படத்திற்கு துப்பறியும் ஆனந்த் என்று பெயரும் இட்டனர். இந்நிலையில் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு கௌதம் காத்துக்கிடந்ததும், பின் சில உரசல்களுடன் இனி அஜீத்துக்காக நான் காத்திருக்க முடியாது என்றும் கௌதம் சொல்லியிருந்தார். இதனையடுத்து அந்தபடம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் டைரக்டர்கள் கவுதம் மேனன், முருகதாஸ் ஆகியோரை தனிதனியாக அழைத்து விஜய் விருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் இந்த இருவருள் ஒருவரது படத்தில்தான் அடுத்து நடிப்பார் என்று கணிக்கப்பட்டது. அந்த கணிப்பு இப்போது உண்மையாகி இருக்கிறது. நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டிருந்த துப்பறியும் ஆனந்த் கதையில் சில மாற்றங்களை செய்து, அதில் விஜய்யை நடிக்க வைக்க இருக்கிறார் கவுதம். இந்தபடத்திற்கு "யோஹன்- அத்தியாயம் ஒன்று" என்ற பெயரிட்டுள்ளார். மேலும் கவுதம் மேனனே தமது போட்டோன் கதாஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுதமின் பிரம்மாண்ட கூட்டணியான ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை, மனோஜ் பரமஹம்ஸா, ராஜீவன் ஆகியோருடன் "யோஹன்- அத்தியாயம் ஒன்று" படத்தை இயக்க இருக்கிறார். பக்கா ஆக்ஷன் படமான யோஹன்- அத்தியாயம் ஒன்று, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில், விஜய் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.