டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தனது ஒவ்வொரு படங்களிலுமே ரசிகர்களுக்கு ஏதாவது புதிய அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் விஜய். அந்த வகையில், எந்த இயக்குனராக இருந்தாலும் அவர்களிடம் சீன் பை சீன் கதையை கேட்டு ஆராயும் அவர், பின்னர் ரசிகர்களை கருத்தில் கொண்டு தனது சார்பில் சில திருத்தங்களை சொல்வார். அதை டைரக்டர்களும் ஏற்றுக்கொள்வார்கள். அந்த வகையில், தற்போது பரதன் இயக்கத்தில் தான் நடித்து வரும் 60-வது படத்திலும் விஜய்சார்பில் சில ஆலோசனைகள் கூறப்பட்டதாம்.
அந்த வகையில், அது கிராமத்து படம் என்றாலும், கண்டிப்பாக நகரத்து கேரக்டர் ஒன்று வேண்டும் என்று விஜய்தான் கூறினாராம். அதன்பிறகுதான் கிராமத்து வேடங்களாக இருந்த அந்த இரண்டு கேரக்டர்களில் ஒன்றை நகரத்து கெட்டப்புக்கு மாற்றினாராம் பரதன். அதோடு, இரண்டு பாடல்கள் கட்டாயம் அதிரடி டியூனில் உருவாக வேண்டும். அப்போதுதான் நான் ஆடுவதைப்பார்த்து எனது ரசிகர்களும் தியேட்டரில் ஆடி என்சாய் பண்ண முடியும் என்று கூறினாராம். அதையடுத்து மெலோடி கிங்கான சந்தோஷ் நாராயணன் அதிரடியான சில மெட்டுக்களை விஜய்யிடம் போட்டுக்காண்பித்து ஓகே பெற்றாராம்.