ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுதா இயக்கத்தில் மாதவன் நடித்த படம் இறுதிச்சுற்று. அந்த படத்தில் பாக்சிங் கோட்சாக நடித்திருந்தார் அவர். பாக்சராக ரித்திகா சிங் நடித்தார். பாக்சிங் கதை என்றால் நடிகர்களே நடித்துவந்த நிலையில், முதன்முறையாக பெண்ணை மையப்படுத்தி அந்த படத்தை இயக்கினார் பெண் இயக்குனர் சுதா. அதுவும் ரியல் பாக்சர் ரித்திகாசிங்கையே நாயகியாக நடிக்க வைத்தார். அவரும் நடிப்பது போன்று இல்லாமல் ரியலாக நடித்தது படத்துக்கு பெரிய பலமாக இருந்தது. அதனால் இறுதிச்சுற்று படம் வெற்றிச்சுற்றாக அமைந்தது. அதனால் உடனடியாக விஜயசேதுபதி நடிக்கும் ஆண்டவன் கட்டளை படத்தில் கமிட்டாகி நடித்து முடித்து விட்டார் ரித்திகா சிங். அடுத்தபடியாக சில படங்களில் நடிக்கவும் கதை கேட்டுள்ளார்.
இந்த நிலையில், இறுதிச்சுற்று படத்தில் தான் சிறப்பாக நடித்ததற்கு மாதவன் தான் காரணம். அவர் படத்தில் கோட்சாக இருந்தது போன்று, ஸ்பாட்டிலும் தனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்ததாக கூறி வந்த ரித்திகா சிங், ஆண்டவன் கட்டளை படத்தில் தான் கமிட்டாகி நடிப்பதற்கு முன்பாக, ஒருநாள் மாதவனை மும்பையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றாராம். அப்போது சினிமாவைப்பற்றி ரித்திகாவிற்கு சில அட்வைசோடு ஆசியும் கொடுத்து அனுப்பி வைத்தாராம் மாதவன்.