ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தூங்காவனம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த கமல், சபாஷ் நாயுடு படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பிச்செல்லும் சில சமூக விரோதிகளை அமெரிக்கா வரை துரத்திச் செல்லும் கமல், அங்குள்ள உளவுத்துறையின் உதவியுடன் அவர்களை வேட்டையாடுகிறாராம். அதன்காரணமாகதான், அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அதோடு அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்திலும் கமல் சம்பந்தப்பட்ட சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். அதற்கான அனுமதியை பெற்று விட்டார்களாம். அவர்கள் அனுமதி கொடுத்த அந்த தேதிக்குள் அங்கு படப்பிடிப்பு நடத்தியாக வேண்டுமாம். அந்த நேரம் பார்த்து டைரக்டர் ராஜீவ்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்தான் கமலே படத்தை இயக்கி வருகிறாராம். மேலும், இதுவரை அமெரிக்காவில் தமிழ்ப்படங்கள் படமாக்கப் பட்டபோதும், சபாஷ் நாயுடு படப்பிடிப்புதான் அதிக நாட்கள், அதாவது கிட்டத்தட்ட 3 மாதங்கள் வரை அமெரிக்காவில் நடக்கிறதாம்.