தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உட்தா பஞ்சாப் படத்திற்கு 13 கட்டுகள் கொடுத்து தணிக்கை குழு அனுமதி அளித்தநிலையில், இப்படம் தொடர்பான வழக்கில் ஒரே ஒரு கட்டு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று மும்பை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இயக்குனர் அபிஷேக் சவுபே இயக்கத்தில், நடிகர் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கும் படம் உட்தா பஞ்சாப். பஞ்சாபில் நடக்கும் போதை சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளதுடன் போதை விழிப்புணர்வு படமாகவும் இப்படத்தை இயக்கியுள்ளார்கள். ஆனால் இந்த படத்தை தணிக்கை செய்த சினிமா தணிக்கைக் குழு, அதில் சில காட்சிகள் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதாகவும், படத்தின் தலைப்பில் வரும் பஞ்சாப் என்ற பெயருக்கும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இப்படத்தில் 89 காட்சிகளை நீக்கும்படி சென்சார் போர்டு பரிந்துரை செய்தது. ஆனால் இதற்கு படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு மும்பை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.
அப்போது, தணிக்கை குழுவுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை கோர்ட்டில் முன் வைத்தது உட்தா பஞ்சாப் படக் குழு. இதனிடையே சர்ச்சைக்குரிய உட்தா பஞ்சாப் திரைப்படத்தை வெளியிட சினிமா தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. படத்திற்கு சினிமா தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. சர்ச்கைகுரிய 13 காட்சிகளை நீக்கியதால் அனுமதி அளித்துள்ளதாக சினிமா தணிக்கை குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உட்தா பஞ்சாப் வழக்கு இன்று மும்பை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இப்படத்தில் இந்திய இறையான்மையை பாதிக்கும் வண்ணம் எந்த காட்சியும் இல்லை. படத்தில் ஒரே ஒரு காட்சியான சிறுநீர் காட்சியை மட்டும் நீக்க வேண்டும் என்றும், இன்னும் இரண்டு நாட்களில் உட்தா பஞ்சாப் படத்திற்கு புதிய தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறக்கப்பட்டது.
இதனால் கடந்த சில நாட்களாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட உட்தா பஞ்சாப் பட விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.