Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்நாடு 100 சதவிகிதம் எழுத்தறிவு பெற வேண்டும்: சூர்யா வேண்டுகோள்

13 ஜூன், 2016 - 10:16 IST
எழுத்தின் அளவு:
Tamilnadu-must-have-100-percent-education-says-Suriya

சிவகுமாரின் 100 வது படமான 'ரோசாப்பூ ரவிக்கைகாரி' படத்தின் 100வது நாள் விழாவில் எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டது 'ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளை'. இந்த அறக்கட்டளை ஆண்டுதோறும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறது. 37வது ஆண்டாக இந்த பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் 20 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. திண்டிவனம் தாய் தமிழ் நடுநிலைப்பள்ளிக்கு 2 லட்சம் வழங்கப்பட்டது.


விழாவில் சூர்யா பேசியதாவது: சிறிய அளவில் அப்பாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு இப்போது பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. எனது அகரம் அமைப்பும், கார்த்தியும் இதனுடன் இணைந்திருக்கிறோம். அகரம் அமைப்பு 1300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 250க்கும் மேற்பட்ட அகரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் பணியை செய்து வருகிறோம். நான் சில அரசு பள்ளிகளுக்கு சென்று பார்த்தேன். அங்கு வகுப்பறையில் மாடுகளை கட்டி வைத்திருக்கிறார்கள். சரியான கூறையில்லை, கழிப்பிட வசதி இல்லை. இந்த மாதிரி பள்ளிகளில் இருந்துதான் நல்ல மதிப்பெண்களோடு மாணவர்கள் வருகிறார்கள். அரசு பள்ளிகளை பேணி பாதுகாக்க வேண்டும்.


10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 40 முதல் 45 சதவிதம் தான் எழுத்தறிவு பெற்றவர்கள் என்று புள்ளி விபரம் சொன்னது. இப்போது கொஞ்சம் அதிகரித்திருக்கலாம். ஆனால் 100 சதவிகிதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும். பள்ளியில் படித்த மாணவர்கள் இனி கல்லூரியில் படிக்க இருக்கிறீர்கள். இப்போது உங்கள் பார்வை விசாலமாக இருக்க வேண்டும். பள்ளியில் புத்தகத்தில் உலகத்தை படித்தீர்கள். இனி உலகத்தையே புத்தகமாக படிக்க வேண்டும். நாளைய உலகம் உங்களை எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கிறது. என்றார் சூர்யா.


விழாவில் கார்த்தி, சிவகுமார், அவரது மகள் பிருந்தா, நண்பர் வீரண்ணா, கல்வியாளர் கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பரிசு பெற்ற மாவண மாணவிகள் நன்றி தெரிவித்து பேசினார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in