'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்ரீகாந்த்- சங்கீதா நடித்த உயிர் படத்தை இயக்கிய சாமி, அதன்பிறகு மிருகம், சிந்துசமவெளி, கங்காரு படங்களை இயக்கினார். இதில் சிந்துசமவெளி படத்தின் மாமனார்-மருமகளின் தகாத உறவினை மையமாக வைத்து கதை பண்ணியிருந்ததால் அந்த படம் சர்ச்சைகளை சந்தித்தது. அதனால் கங்காரு படத்தை செண்டிமென்ட் கதையில் இயக்கினார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், மிருகம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தற்போது தயார் செய்து விட்டார் சாமி. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறதாம்.
மேலும், மிருகம் படத்தில் நடித்த ஆதி நாயகனாக நடித்தபோதும் மிருகம்-2வில் அவருக்கு நெகடீவ் வேடம்தானாம். இன்னொரு முக்கிய ஹீரோ வேடம் உள்ளதாம். அதில் மலையாள நடிகர்கள் நிவின் பாலி அல்லது துல்கர்சல்மான் இருவரில் ஒருவரை புக் பண்ணுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் சாமி. அதனால் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் மிருகம்-2 உருவாகிறதாம். அதோடு, ஆதி தற்போது 2 தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வருவதால், அவரது தெலுங்கு மார்க்கெட்டை கருத்தில் கொண்டுதான் மிருகத்தில் ஹீரோவாக நடித்த இந்த இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க வைக்கிறாராம் சாமி.