நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… |
பைரவி, சபீதா என்கிற சபாபதி, என் இனிய தோழியே என பல தொடர்களில் நடித்தவர் பிரியங்கா. தற்போது அபூர்வ ராகங்கள், வம்சம் தொடர்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஆனால் அபூர்வ ராகங்களில் எனக்கு டப்பிங் கொடுக்கும் பாத்திமாவின் குரலே நன்றாக இருப்பதால் இப்போது எனக்கு டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசையே இல்லை என்கிறார் பிரியங்கா.
இதுபற்றி அவர் கூறும்போது, அபூர்வ ராகங்கள் தொடரில் அனிதா என்ற பேய் கேரக்டரில் தற்போது நடித்து வருகிறேன். அதேபோல் வம்சம் தொடரில் ஜோதிகா என்ற ரோலில் நடிக்கிறேன். இந்த இரண்டு சீரியல்களிலும் தற்போது எனது ட்ரேக் தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருப்பதால் ரொம்ப பிசியாக இருக்கிறேன்.
மேலும், நான் நடிக்கும் வேடங்களில் எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு உண்டு. ஆனால் சீரியல்களில் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. என்றாலும், அபூர்வ ராகங் கள் தொடரில் எனக்கு டப்பிங் பேசும் பாத்திமாவின் குரல் ரொம்ப அருமையாக உள்ளது. எனக்கும் நன்றாக பொருந்தியிருக்கிறது. அவரது குரல் எனக்கு நன் றாக செட்டாகி விட்டதால், அடுத்தபடியான எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசையே இல்லாமல் போய் விட்டது. தொடர்ந்து பாத்திமாவே பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் பிரியங்கா.