'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரைப்படங்களை மக்கள் பார்க்கலாமா-? வேண்டாமா? எந்த வயதினர் பார்க்கலாம் என்ற முடிவை தணிக்கை குழு எடுத்து இதற்கான சான்றிதழை வழங்கி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்திய அரசு அதிகாரியும், மத்திய அரசால் நியமிக்கப்படும் பிரநிதிகளும் தணிக்கை குழுவில் இருக்கிறார்கள். சமீபகாலமாக தணிக்கை குழு என்பது சான்றிதழ் அளிக்கும் அமைப்பு என்பதையும் தாண்டி, படங்களின் காட்சிகளை வெட்டுவது. படத்துக்கு தடைவிதிப்பது என்ற தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தது. இப்போது அது பூதாகரமாக வெடித்துள்ளது.
போதை பொருட்களால் இளைய தலைமுறை எப்படி சீரழிகிறது என்பதை மையமாக வைத்து 'உட்தா பஞ்சாப்' என்ற இந்திப் படம் தணிக்கைக்கு சென்றபோது அந்தப் படத்திற்கு 89 கட் கொடுத்து தணிக்கை குழு கின்னஸ் சாதனை படைத்தது. அதோடு படத்தின் டைட்டிலையே மாற்ற வேண்டும் என்றது-. இது இந்தி திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஒன்று திரண்டு இந்தி நட்சத்திரங்கள் தணிக்கை குழுவின் அதிகாரத்தை குறைப்பதோடு நடைமுறையையே மாற்ற வேண்டும் என்று மும்பை நீதிமன்றத்தி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் “தணிக்கை குழு சான்றிதழ் மட்டுமே வழங்க வேண்டும் காட்சிகளை வெட்ட அதிகாரம் இல்லை” என்று தணிக்கை குழுவிற்கு கண்டனம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து தணிக்கை குழுவுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இதனால் தணிக்கை குழு நடைமுறையை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தணிக்கை குழு வாரிய சீரமைப்பு குழு உறுப்பினர் கவுதம் கோஷ் கொல்கத்தாலவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “தணிக்கை குழுவில் பல்வேறு மாறுதல்களை செய்ய மத்திய அரசு முன் வந்துள்ளது. அந்த மாற்றங்கள் என்ன என்பது பற்றி இப்போது சொல்ல இயலாது. படத்தின் காட்சிகளை வெட்டாமல் படத்தின் தரத்திற்கு ஏற்ப சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 'யூ', 'ஏ', 'யூஏ' என மூன்ற வகையான சான்றிதழ் உள்ளது. மேலும் கூடுதல் வகையான சான்றிதழ் உருவாக்கப்படும்” என்றார்.