டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபகாலமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவரெல்லாம் கவர்ச்சியில் தாக்குப்பிடிக்க மாட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அஞ்சானில் ஏனைய நடிகைகளை யெல்லாம் அஞ்ச வைக்கும் வகையில் அதிரடி கவர்ச்சி நடிகையாகவும் உருவெடுத்த சமந்தா, ஹோம்லி, கிளாமர் இரண்டுவிதமான கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற நடிகையாக வலம் வருகிறார்.
மேலும், தற்போது அவரது கவனம் நயன்தாரா, திரிஷாவைப்போன்று கதாநாயகியை முன்னிறுத்தும் கதைகள் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக ஹாரர் கதைகளில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக வெளிப்படையாக கூறி வரும் சமந்தா, சில பேய் பட டைரக்டர்களிடம் வாய்ப்பும் கேட்டு வருகிறார்.
இப்படி சினிமாவில அடுத்த லெவலுக்கு செல்ல முயற்சித்து வரும் சமந்தா, சினிமா போக மீதமுள்ள நேரத்தை சமூக சேவைக்கு அர்ப்பணித்து வருகிறார். ஐதராபாத்திலுள்ள பிரத்யுஷா என்ற சமூக சேவை அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வரும் சமந்தா, விரைவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அது மூலம் வரும் தொகையை சமூக சேவைகளுக்காக வழங்கப்பேகிறாராம். இப்படி தன்னால் ஆன உதவியை ஏழைகளுக்கு கொடுப்பது அவருக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்து வருகிறதாம்.