பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
துள்ளுவதோ இளமை தொடங்கி 'புதுப்பேட்டை' வரை செல்வராகவனின் படங்களுக்கு யுவன்தான் இசையமைத்து வந்தார். பிறகு இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் பிரிந்தனர். செல்வராகவன் - யுவன் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம் புதுப்பேட்டை. அந்தப் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து மீண்டும் செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா இணைகின்றனர்.
'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்காக இவர்களின் கூட்டணி மீண்டும் கைகோர்க்கிறது. கௌதம் மேனனின் தயாரிப்பில், செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகன். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் முதல் ஹாரர் படம் இது. 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்காக யுவன்சங்கர்ராஜா இசையில் உருவான ஒரு மெலடிப் பாடலுக்கான படப்பிடிப்பை கடந்த வாரம் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளார் செல்வராகவன்.
எஸ்.ஜே.சூர்யாவும், படத்தின் நாயகியான ரெஜினாவும் பங்கேற்ற இந்தப் பாடல் காட்சியை சென்னை வளசரவாக்கத்திலுள்ள ஏஆர்எஸ் கார்டனில் படமாக்கி இருக்கிறார் செல்வராகவன்.