ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் லிங்குசாமியின் இன்னொரு முகம் கவிஞர். அவர் ஏற்கெனவே 'லிங்கூ' என்ற கவிதை தொகுப்பு நூலை வெளியிட்டார். தற்போது அதன் இரண்டாம் பாகமாக 'செல்ஃபி எடுத்துக் கொள்கிறது மரம்' என்ற நூலை வெளியிட்டுள்ளார். இதன் வெளியீட்டு விழா இயக்குனர் கவுதம் மேனனின் திருவான்மியூர் கடற்கரையோர வீட்டில் நடந்தது. கவிஞர் அப்துல் ரகுமான் வெளியிட்டார், கவுதம் மேனன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் லிங்குசாமி பேசியதாவது: நான் எப்போதும் கவிதையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்குள் ஆதியில் தோன்றியது கவிதையாகவே இருந்திருக்ககிறது. பிறகுதான் கதை எல்லாம் வந்தது என்பேன். ஊரிலிருந்து சென்னை வந்த போது ரெண்டு மூணு கவிதைகளும் கொஞ்சம் நம்பிக்கையுடன்தான் இங்கு வந்தேன். கையில் காசு பணம் வேண்டாம் கவிதை போதும் பிழைத்துக்கொள்ளலாம் என்றிருப்பேன்.எதுவுமே இல்லைன்னாலும் கவிதை இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்றிருப்பேன். அப்போதே அப்படி இருந்தேன்.இப்போது இவ்வளவு பேர் கிடைத்திருக்கிறீர்கள்.எனக்கென்ன கவலை?
நான் எப்போதும் கவிதை ரசிக்கும் மனசோடு இருப்பவன், எவ்வளவு சோதனை வந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கவிதைகளுக்கு முன்னால அதெல்லாம் உண்மையிலேயே பெரிதாகத் தெரியாது. அந்த மனசு மட்டும் இருந்தால் போதும். எவ்வளவு சோதனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். இப்போது கூட வருகிற மிஸ்டுகாலில் 6 காலில் 3 கால் பணம் திருப்பித்தரக் கேட்கும் பைனான்சியராகக்கூட இருக்கலாம். கடன் இருக்கிறது கவலை இல்லை. காரணம் நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்.
நான் உதவி இயக்குநராக சிரமப்பட்ட காலத்தில் கூட எல்லாக்கடையிலும் கடன் இருக்கும் 4 மாதம் கழித்து ஊர் போய்விட்டு வந்து எல்லாருக்கும் திருப்பிக் கொடுப்பேன். எங்கள் குடும்பம் ஊருவிட்டு வேறு ஊர் வந்த போது கூட ஆயிரம் ரூபாய் கடன் கொடுப்பதற்காக மாட்டை விற்றுக் கொடுத்துவிட்டு வந்தவர் எங்கள் அப்பா. அந்த நேர்மை என் ரத்தத்திலேயே இருக்கிறது. எனக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது.
இந்த மனநிலையோடு அடுத்த படத்தை தொடங்குகிறேன். நீங்கள் எல்லாம் இருக்கிற போது எனக்கு எதுவுமே பிரச்சினை இல்லை. எல்லாக் கஷ்டங்களும் கடந்து போய்விடும். இதுவும் கடந்து போகும். எல்லாம் கடந்து போகும். இதை என் தனிப்பட்ட விழாவாக நினைக்கவில்லை. எல்லாரையும் சந்திக்கிற ஒரு வாய்ப்பாக நினைக்கிறேன். அதற்காகவே நானாக ஏற்படுத்திக்கொண்ட சந்தர்ப்பமே இது. இவ்வாறு லிங்குசாமி பேசினார்.
விழாவில் பாடகி அனுராதா ஸ்ரீராம், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், பிருந்தா சாரதி, இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், இயக்குனர் சசி, பார்த்திபன், வசந்தபாலன், மிஷ்கின், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, மாரிமுத்து, நந்தாபெரியசாமி, ராஜுமுருகன், நலன் குமாரசாமி, மணிபாரதி, விஜய்மில்டன், கவிஞர்கள் அறிவுமதி, விவேகா, நெல்லை ஜெயந்தா, ஜெயபாஸ்கரன், யுகபாரதி, வெண்ணிலா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.