டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா (சைமா) வருகிற ஜூன் 30 மற்றும் ஜூலை 1ந் தேதிகளில் சிங்கப்பூரில் நடக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் மொழிகளில் 2015ம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு 19 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் துபாய், சார்ஜா, கோலாம்பூரில் நடந்த விழா இந்த ஆண்டு சிங்கப்பூரில் நடத்தப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி அறிமுகம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் ஜெயம்ரவி, ராணா நடிகைகள் குஷ்பு, நிக்கி கல்ராணி, வேதிகா கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சைமா விருது விழாத் தலைவர் பிருந்தா பிரசாத் “இந்த ஆண்டு சைமா விருது வழங்கும் விழா சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ'வுடன் இணைந்து நடக்கிறது. அந்தப் படத்தில் இடம்பெறும் “செஞ்சிட்டாளே...” என்ற பாடல் விருது வழங்கும் விழாவில் வெளியிடப்படுகிறது. முந்தைய விழாக்களை விட இந்த ஆண்டு விழாவுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. சிங்கப்பூர் மக்களின் நீண்ட நாள் விருப்பத்தை இந்த விழா பூர்த்தி செய்யும். விருது நிகழ்ச்சி நடைபெறும் இரண்டு நாட்களும் பிரமாண்ட கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகைகள், நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் கலந்து கொள்ள தென்னிந்திய முன்னணி நடிகர்கள் நடிகைளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.