டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முன்பெல்லாம் சினிமாவில் இயக்குனராக வருபவர்கள் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்ற பிறகுதான் தனித்து படம் இயக்குவார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல. குறும் படங்களை இயக்கியவர்களே பியூச்சர் பிலிம் இயக்க வந்து கொண்டிருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி தரணீதரன், பாலாஜி மோகன் என பலரை சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களெல்லாம் படம் இயக்கி வெற்றி பெற்ற பிறகு கோலிவுட்டில் குறும்பட டைரக்டர்களுக்கான வரவேற்பு அதிகரித்துவிட்டது.
இப்படி குறும்பட டைரக்டர்களுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பது போன்று குறும்படங்களுக்கான வேல்யூவும் அதிகரித்து வருகிறது. அதன்காரணமாக சமீபத்தில் 3 குறும்படங்களையே அவியல் என்ற பெயரில் ஒரு படமாக வெளியிட்டனர். அதேபோல் தற்போது 666 என்ற பெயரில் மூன்று குறும்படங்களை இணைத்து ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் எழுத்தாளர் அஜயன் பாலா எழுதிய கதையில் உருவாகும் ஒரு கதையில் கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் அன்புக்கரசு என்ற சிறுவனாக நடித் தவர்தான் இந்த கிஷோர். அதன்பிறகு கோலிசோடா, வஜ்ரம் போன்ற படங்களிலும் பசங்க படத்தில் நடித்த மற்ற பசங்களுடன் இணைந்து நடித்த கிஷோர் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.