டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டாலே அடுத்ததாக அவர்கள் ஹீரோயின் மகுடத்தை மீண்டும் சூட்டிக்கொள்வது மிகவும் கடினம் தான். வேண்டுமென்றால் கதையின் நாயகி' என்கிற பெயரில் இன்னொரு மகுடத்தை சூட்டுவார்கள்.. இந்த ஜெராக்ஸ் மகுடம் ஏற்கனவே திருமணம் ஆன கனிகாவுக்கு சில வருடங்களுக்கு முன் சூட்டப்பட்டது. நடிகை அமலாபாலோ சமீபத்தில் தான் இந்த 'கதையின் நாயகி' பதவியை பிடித்துள்ளார்.. அந்தவகையில் அவர்கள் படத்தில் ஏற்கும் கேரக்டர்கள் வெகு நிச்சயமாக 'அம்மா' கதாபாத்திரங்களாகத்தான் இருக்கும்..
பசங்க படத்தில் அப்படித்தானே நடித்திருந்தார் அமலாபால். ஆனால் இப்போது கனிகாவின் நிலை 15 வயதான் டீனேஜ் பெண்ணின் தாயாக நடிக்கும் அளவுக்கு மாறிவிட்டது.. ஆனால் கதையின் நாயகி இவர்தான். ஒரு குழந்தை வளர்ந்து ஆளாகி டீனேஜ் பருவம் வரை அதன் தாயாருக்கும் மகளுக்குமான உறவுச்சங்கிலியும் அதில் அவ்வப்போது ஏற்படும் விரிசல்களும் தான் கனிகா தற்போது நடித்து வரும் '10 கல்பனகள்' படத்தின் கதை.. தமிழில் தற்போது அம்மா கணக்கு' படத்தில் 'கதையின் நாயகி'யாக நடித்துள்ள அமலாபாலும் 15 வயது டீனேஜ் பெண்ணின் அம்மாவாகத்தான் நடிக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.