ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தாய்மொழியான இந்தியில் கோலேச்சப்போகிறேன் என்று பாலிவுட்டுக்கு சென்ற தமன்னாவுக்கு அங்கு நடித்த படங்கள் சறுக்கியதால் மீண்டும் தமிழுக்கு வந்தார். அப்போது ஏற்கனவே அவருக்கு சிறுத்தை படத்தில் வாய்ப்பளித்திருந்த டைரக்டர் சிவா, அந்த சமயத்தில் அஜீத்தை வைத்து தான் இயக்கிய வீரம் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் ஹிட்டாக அமைந்ததால் தமன்னாவுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புக்ள கிடைத்தது. அதில் ராஜமவுலியின் பாகுபலி முக்கியமான படமாக அமைந்தது.
காரணம், அதுவரை தமன்னாவை சாதாரண நாயகியாக மட்டுமே டைரக்டர்கள் பார்த்து வந்த நிலையில், ராஜமவுலியோ அவரை புரட்சி பெண் வேடத்தில் நடிக்க வைத்தார். அந்தவகையில், பிரபாசுடன் கத்தி சண்டையெல்லாம் போட்டார் தமன்னா. இப்போது பாகுபலி-2விலும் தமன்னாவின் புரட்சி பெண் வேடம் தொடர்கிறதாம். அதோடு, ருத்ரம்மா தேவியில் அனுஷ்கா நடித்தது போன்று குதிரையேற்றம், வாள் சண்டையெல்லாம் செய்கிறாராம் தமன்னா. அதனால் தற்போது அவருக்கு முழுபயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறதாம்