கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
குத்து ரம்யாவுக்கு பிறகு கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகளுக்கு கோலிவுட்டில் பெரிதாக எதிர்காலம் அமையவில்லை. அந்த வகையில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்தியா-பாகிஸ்தான் படத்தில் நடித்த சுஷ்மாராஜ், சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் படத்தில் நடித்த தீபா சன்னதி போன்ற நடிகை கள் பெரிதாக வளருவார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன்பிறகு புதிய படங்கள் இல்லாமல் திரும்பி விட்டனர். இவர்களில் சுஷ்மாராஜை அடுத்த அனுஷ்கா என்று சொல்லியே பிரபலப்படுத்தினர்.
இந்த நிலையில், தற்போது கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் இன்னொரு புதுவரவு நடிகைதான் நைனா சர்வார். இவர் மிர்ச்சி சிவா நடித்துள்ள அட்றா மச்சான் விசிலு என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, இளசுகளுக்கு தேவையான கிளாமரையுமஅ போதுமான அளவுக்கு முதல் படத்திலேயே வாரி வழங்கியிருக்கிறார். அதையடுத்து, சமுத்திகனி முக்கிய வேடத்தில் நடித்து வரும கொளஞ்சி படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார. ஆக, ஒரே நேரத்தில் இரண் டுபடஙக்ளலி நடித்து வருகிறார் நைனா சர்வார்.
இந்த படங்களில் அவரிடமிருந்து சிறப்பான நடிப்பு வெளிப்பட்டிருப்பதாக அந்த யூனிட் நபர்கள் பேசிக்கொண்டு வருவதை அடுத்து, புதிய படங்களுக்கு நைனா சர்வாரை புக் பண்ண சில தயாரிப்பாளர்கள் வட்டம் போட்டு வருகிறார்கள். அந்த வகையில் சிலரிடம் கதை கேட்டுள்ள அவர், ஹீரோ வேல்யூ கொண்ட கதைகளுக்கு ஓகே சொல்லியிருப்பதோடு, புதுமுக ஹீரோக்களின் படங்களை திருப்பி அனுப்பி விட்டாராம். மேலும் நடித்து வரும் இரண்டு படங்களில் ஒன்று வெற்றி பெற்றாலும், சம்பளத்தை உயர்த்தி விடலாம் என்பதால், இப்போது சம்பளம் பேச வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு ஒரு செக் வைத்துள்ளாராம் நைனா சர்வார்.