ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகிவரும் 'புலி முருகன்' படத்தை முடித்து கொடுத்துவிட்ட மோகன்லால், அடுத்ததாக பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஒப்பம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.. இதன் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.. பிரியதர்ஷன்-மோகன்லால் கூட்டணியில் உருவான கிலுக்கம், மின்னாரம் உட்பட நிறைய படங்கள் ஊட்டியில் படமாக்கப்பட்டு வெற்றி கண்டவை தான். அந்த சென்டிமென்ட் தானோ என்னவோ தற்போது ஊட்டியில் சில காட்சிகளை படமாக்கி வருகிறார் பிரியதர்ஷன்.
இந்தப்படத்தில் கண்பார்வை அற்றவராக நடிக்கிறார் மோகன்லால். விமலாராமன் கதாநாயகியாக நடிக்க, போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார் நடிகை அனுஸ்ரீ. இயக்குனர் சமுத்திரக்கனியும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'சிகார்' படத்தை தொடர்ந்து மோகன்லாலுடன் சமுத்திரக்கனி நடிக்கும் இரண்டாவது படம் இது. கண்பார்வையற்ற மோகன்லாலின் மீது எதிர்பாராத விதமாக கொலைப்பழி விழுந்துவிட, அவர் அதிலிருந்து எப்படி சாமர்த்தியமாக தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம். ஆக, விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லராக உருவாகி வருகிறது 'ஒப்பம்'.