ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல என, தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில், விலங்குகள் நல அமைப்பு சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற விஷால், ஜல்லிக்கட்டு தடைக்கு வரவேற்பு அளித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, நடிகர் விஷாலுக்கு எதிராக, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர். திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் அவரது கொடும்பாவியை எரித்தனர்.
இந்த நிலையில், நடிகர் விஷால் தன், டுவிட்டர் பக்கத்தில், நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், அதுப்பற்றி நான் கருத்து கூறினால் நன்றாக இருக்காது என மட்டுமே கூறினேன் என, குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த கருத்துக்கும், ஜல்லிக்கட்டை நேசிக்கும் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவருக்கு ஆதரவாகவும், ரசிகர்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.