நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ள படம் உட்தா பஞ்சாப். ஷாகித்கபூர், கரீனாகபூர், ஆலியாபட் ஆகியோர் நடித்துள்ள இப்படம் போதை பொருள் விழிப்புணர்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அபிஷேக் சவுபே இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வருகிற 17-ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் சென்சார் போர்டுக்கும், உட்தா பஞ்சாப் படக்குழுவும் நேரடியாக மோத தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு ஆதரவாக நடிகர் அமீர்கான் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது... மிகவும் வருத்தமான விஷயம். எனக்கு கிடைத்த தகவல்படி, இப்படம் போதை பொருள் விழிப்புணர்வு படமாக எடுத்திருப்பதாக கேள்விப்பட்டேன். இப்படத்தில் ரசிகர்கள் எழுந்துபோகும் அளவுக்கு காட்சிகள் உள்ளதா அல்லது படத்தில் நீக்கப்பட வேண்டிய காட்சிகள் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் இப்படத்திற்கு எழுந்துள்ள பிரச்னை சென்சார் போர்டின் மீதான தவறான கண்ணோட்டத்தை தான் காண்பிக்கிறது. உட்தா பஞ்சாப் படத்திற்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். படைப்பாளிகள் சுதந்திரமாக பேச முடியவில்லை, அவர்கள் சுதந்திரமாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.