'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ள படம் உட்தா பஞ்சாப். போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய இந்தப் படத்தை அபிஷேக் சவுபே இயக்கி உள்ளார். ஷாகித் கபூர், ஆலியா பட், கரீனா கபூர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற 17ந் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தணிக்கை குழு தலைவர் பகலஜ் நிஹாலனி தலைமையிலான குழுவினர் படத்தை பார்த்து விட்டு “பல காட்சிகளை நீக்க வேண்டும். 13 இடங்களில் காட்சிகளை மாற்றம் செய்ய வேண்டும். படத்தின் டைட்டிலில் பஞ்சாப் என்ற பெயர் இடம்பெறக்கூடாது” என்று தெரிவித்தது. இது இயக்குனரையும், தயாரிப்பாளரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இதுகுறித்து தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் “ஒரு திரைப்படத்தின் காட்சியை துண்டு துண்டாக வெட்டச் சொல்வது அதனை வெட்டி கொலை செய்வதற்கு சமம்” என்று டுவிட்டரில் எழுதினார்.
இதற்கு தணிக்கை குழு தலைவர் பகலஜி நிஹாலனி, “படம் பஞ்சாப் மாநிலத்தை மிக மோசமாக சித்தரிக்கிறது. அப்படிச் செய்வதற்காக படத்தின் தயாரிப்பாளர் ஆம் ஆத்மி கட்சியிடம் பணம் பெற்றுள்ளதாக கேள்விப்பட்டேன்” என்று டுவிட்டரில் பதில் அளித்தார்.
இது இந்தி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்தி திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் நேற்று திரண்டு வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் “தணிக்கை குழு பதவியில் இருந்து பகலஜ் நிஹாலனியை நீக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்துவோம்” என்று அறிவித்தார்கள். இதனால் இந்தி திரையுலகில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.