மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பழம்பெரும் இசை அமைப்பாளர் கோவர்த்தன் வறுமையில் வாடுகிற செய்தி வெளியானதை தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலிலிதா டாக்டர் எம்.ஜி.ஆர் அறக்கட்டளையிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதற்கு இசை அமைப்பாளரும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவருமான தேவா, இசை குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இசையமைப்பாளர் கோவர்தன் மாஸ்டர் அவர்களுடைய வறுமை நிலையினை மனதில் கொண்டு தாயுள்ளத்தோடு, முதலமைச்சர் அவர்கள் ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் வாயிலாக முதலமைச்சர் அவர்கள் இசை குடும்பத்தினர் மீது எந்த அளவிற்கு கருணையும், பற்றுதலும் கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இந்த பேருதவி செய்ததற்கு ஒட்டுமொத்த இசைக் குடும்பங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இயல், இசை,நாடகம், நாட்டியம் திரைப்படம் மற்றும் கிராமியக் கலைகள் என பல தரப்பட்ட கலைப் பிரிவுகளை சார்ந்த கலைஞர்களுக்கு, நலிந்த நிலையில் வாழும் புகழ் பெற்ற வயோதிக கலைஞர்களுக்கு மாதம் தோறும் நிதி உதவி வழங்குதல், மறைந்த கலைஞர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு குடும்ப பராமரிப்பு உதவி தொகை வழங்குதல் இளம் கலைஞர்களை வெளி ஊருக்கு அறிமுகம் செய்யும் வண்ணம் அவர்களுக்கு கலை நிகழ்ச்சி வழங்கி ஊக்குவித்தல், புதிய நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடை ஏற்றம் செய்ய நிதி உதவி வழங்குதல். தொன்மை சிறப்புமிக்க கலை அம்சங்களை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் தெருக்கூத்து, இசை நாடகம் பொம்மலாட்டம், தோற்பாவை கூத்து போன்றவற்றை ஆவணப்படமாக்க எண்ணற்ற உதவிகளை செய்துவருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தேவா கூறியுள்ளார்.