மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
நடிகை இஷாரா 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' என்ற படத்தில் நடித்து வந்தார். 'கல்லூரி' அகில் அவருக்கு ஜோடியாக நடித்தார். லாரன்ஸ் ஜோசப் தயாரித்தார், கெவின் ஜோசப் இயக்கினார். “நடிகை இஷாரா தங்கள் படத்தில் நடிக்காமல் தலைமறைவாகிவிட்டார். அவரால் எங்களுக்கு பெருத்த நஷ்டம்” என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் அறிக்கை வெளியிட்டனர். இதுகுறித்து இஷாரா தரப்பில் விசாரித்து அதையும் வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த புகார் குறித்து இஷாரா பதில் அளித்துள்ளார். அதில் அவர் “இயக்குனரின் நடத்தை சரியில்லை” என்ற திடுக்கிடும் புகாரை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் பல படங்களில் நடித்து வருவதால் இந்தப் படத்துக்கு அவர்கள் கேட்ட நாட்களை 6 மாதங்கள் வரை பிரித்துக் கொடுத்தேன். என்னை வைத்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். அந்த இரண்டு நாட்களும் எனக்கு மோசமான அனுபவங்களே கிடைத்தது. இயக்குனர் கெவின் ஜோசப் படப்பிடிப்பில் நடந்து கொண்ட விதம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எல்லோர் முன்னிலையிலும் என்னை வாடி போடி என்று ஒருமையில் அழைத்தார். வயதில் மூத்தவர்தானே என்ற அதை பொறுத்துக் கொண்டேன். வசனம் சொல்லிக் கொடுக்கிறேன். நடிக்க சொல்லிக் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர் நடந்து கொண்ட விதம் அநாகரீகமானது. சுவரோடு என்னை சாய்த்து நிற்க வைத்துதான் பேசுவார். அதுவும் இரட்டை அர்த்தம் தொணிக்க... அடிக்கடி தொட்டுப்பேச முயற்சிப்பார். அதிக உரிமை எடுத்துக் கொள்வார்.
இப்படிப்பட்டவருடன் இணைந்து எப்படி என்னால் பணியாற்ற முடியும். அதுவும் நான் கொடுத்த தேதிகள் அனைத்தையும் அவர்கள் வீணாக்கி விட்டார்கள். இப்போது என் பெயரை பயன்படுத்தி விளம்பரம் தேட நினைக்கிறார்கள். அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டினார்கள். அதை சந்திக்க நானும் தயார் என்றேன். நான் போலீசில் புகார் கொடுக்காமல் இருந்ததற்காக அவர்கள்தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இவ்வாறு இஷாரா கூறியுள்ளார்.