அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பொல்லாதவன், வெண்ணிலா கபடிக்குழு, திலகர், தோரணை, விசாரணை உள்பட பல படங்களில் நடித்தவர் கிஷோர். கன்னட நடிகரான இவர் தற்போது தமிழில் சமுத்திரகனி நடித்த சாட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும், அவர் தமிழ், கன்னடத்தில் நடித்து வந்த ஒரு படம் பீஷ்மா என்ற பெயரில் கர்நாடகத்தில் கடந்த மாதம் வெளியானது. அதேபடத்தை தமிழில் காதலி காணவில்லை -என்ற பெயரில் வெளியிட தயாராகினர்.
இந்நிலையில், கன்னட சினிமா தணிக்கைக்குழுவினர் அப்படத்துக்கு யுஏ சான்றிதழ் கொடுத்த நிலையில், தமிழில் ஏ சான்றிதழ் கொடுத்து விட்டார்களாம். இதன்காரணமாக இப்போதுவரை படத்தை வெளியிடாமல் உள்ளனர். இப்படி ஏ சான்றிதழ் கொடுத்ததற்கு காரணம், பட நாயகி ஹார்த்திகா ஷெட்டி ஒரு பாடலில் படுகவர்ச்சியாக நடித்துள்ளாராம். அந்த பாடலை கட் பண்ணினால் ஏ சான்றிதழை மாற்றுவது பற்றி பரிசீலனை செய்யலாம் என்கிறார்களாம். ஆனால் அந்த பாடல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், சில கட்களை கொடுத்தாவது சான்றிதழை மாற்றித்தருமாறு அப்படக்குழு வலியுறுத்திக்கொண்டிருக்கிறதாம்.