ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மலையாள நடிகைகளில் திறமையும் அழகும் ஒன்று சேர்ந்து இருந்தாலும் கூட பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போன நடிகை தான் லட்சுமி கோபால்சாமி.. தமிழில் லிங்குசாமி இயக்கிய பீமா படத்தில் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தாரே அவரே தான். மலையாளத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவோ அல்லது சகோதரி கதாபாத்திரலோ நடித்தும் விட்டார். ஆனால் வருத்தம் தரும் விஷயம் என்னவென்றால் 46 வயதான லட்சுமி கோபால்சாமி இன்னும் திருமணம் செய்துகொள்ளவே இல்லை.. இவர் திருமணம் இதுநாள் வரை தள்ளிப்போனதற்கு மோகன்லாலும் சுரேஷ்கோபியும் தான் காரணம் என்றும் சொல்லியிருக்கிறார்..
இல்லையில்லை.. நீங்கள் நினைக்கிற மாதிரி அவர்கள் இவரை காதலிக்கவும் இல்லை.. இவரும் அவர்களை (ஒருதலையாக கூட) காதலிக்கவும் இல்லை.. ஆனால் மோகன்லால், சுரேஷ்கோபி ஆகியோரின் படங்களில் நடித்தபோது அவர்கள் பெண்களிடம் நடந்துகொண்ட நாகரிகமான நடத்தை, தன்னை அவர்கள் வீட்டுப்பெண்ணாக பார்த்துக்கொண்ட பாங்கு, மற்றவர்களிடம் மரியாதை காட்டி பழகிய விதம் என எல்லாமாக சேர்ந்து அவர் மனதில், தனக்கு வரப்போகும் கணவன் இவர்களில் யாரோ ஒருவரைப்போல இருக்கவேண்டும் என்கிற ஆசையை உருவாக்கிவிட்டதாம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுநாள் வரை அப்படி ஒரு மணவாளன் தன்னை தேடி வரவில்லை என்கிறார் லட்சுமி கோபால்சாமி. வந்த சிலரும் பல விஷயங்களில் ஆவரேஜ் லெவலில் இருந்ததால் அவர்களை மறுத்துவிட்ட லட்சுமி தான் எதிர்பார்க்கும் நபர் தன்னை தேடி வருவார் என்கிற திருமண கனவுடன் காத்திருக்கிறாராம்.