ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் பிபாஷா பாசுவும் ஒருவர். தமிழில் சச்சின் படத்திலும் நடித்து உள்ளார். அதன்பின்னர் பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பெரும்பாலும் த்ரில்லர் படங்களில் அதிகளவில் நடித்தார். நடிகர் ஜான் ஆபிரஹாமை சில காலம் காதலித்து வந்த பிபாஷா, பின்னர் அவரை விட்டு பிரிந்தார். சமீபத்தில் நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிபாஷா.
தனக்கு திருமணம் நடந்தது குறித்து பிபாஷா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛எனக்கு திருமணம் நடக்கும் என்று நினைக்கவே இல்லை, அந்த நம்பிக்கையும் இல்லை, ஆனால் என் கணவர் என்னிடம் அவர் காதலை கூறிய போது என்னால் அதற்கு பதில் கூற முடியால் திகைத்து போயிட்டேன். நான் கரண் சிங் குரோவரிடம் என்னை ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்று தான் முதலில் கேட்டேன். ஆனால் எனக்கு திருமணம் நடந்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. திருமணம் என்பது சமூக அழுத்தமாக நான் எண்ணியது தான் எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லாத காரணமே. இப்போது தான் எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளது என்றார் பிபாஷா.