ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பழம்பெரும் இசை அமைப்பாளர் கோவர்த்தன். அஞ்சல் பெட்டி 520, பட்டணத்தில் பூதம், பூவும் பொட்டும், வீர சபதம், பொற்சிலை உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர். “அந்த சிவகாமி மகனிடம் செய்தி சொல்லடி..., “கண்ணே கண்டதெல்லாம் சாட்சியா...”, “கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்...”, “பத்து பதினாரு முத்தம் முத்தம்...” உள்ளிட்ட பல காலத்தால் அழிக்க முடியாத கானங்களை தந்தவர். தனி இசை அமைப்பாளராக இருந்தாலும் எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் இளையராஜா வரை முன்னணி இசை அமைப்பாளர்களிடம் இசை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியவர்.
தற்போது 88 வயதான கோவர்த்தன் தன் மனைவியுடன் சொந்த ஊரான சேலத்தில் வசித்து வருகிறார். மிகச் சாதாரண வீட்டில் எந்த வருமானமும் இல்லாமல் அக்ககம் பக்கத்தினர் உதவியுடன் வாழ்ந்து வருகிறார். இந்த செய்தி மீடியாக்களில் வெளிவந்தது.
இதை அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கோவர்த்தனுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் அறக்கட்டளையிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். இந்த தொகை கோவர்த்தன் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதன் வட்டியாக மாதம் தோறும் 8,125ரூபாய் அவருக்கு வழங்கப்படும். அவருக்கு அரசு பொது மருத்துவனையில் உயர் சிகிச்சையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.