தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசை அமைப்பாளர் இளையராஜா தனது மகன் கார்த்திக்ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக நேற்று பெங்களூர் விமான நிலையம் வந்தனர்.
விமான நிலைய அதிகாரிகள் இளையராஜாவின் கை பையை சோதனையிட வேண்டும் என்று கூறினர். அதற்கு பையில் கோவில் பிரசாதம்தான் உள்ளது என்று இளையராஜா கூறியுள்ளார். அதை காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள் வலுகட்டாயமாக இளையராஜாவின் பையை சோதனையிட்டுள்ளனர். அதில் இருந்த தேங்காய், பழம், விபூதி, குங்குமம் போன்ற பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று அதனை பறிமுதல் செய்துள்ளனர். தன் தந்தை அவமதிக்கப்படுவதை பொறுக்க முடியாத மகன் கார்த்திக்ராஜா அதனை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள் எடுத்த படங்களை அழிக்க வேண்டும் என்று கார்திக்ராஜாவை வற்புறுத்தினர். அவர் மறுக்கவே இளையராஜாவை சுமார் ஒரு மணி நேரம் காக்க வைத்தனர். இதை கண்ட அங்கிருந்த விமான பயணிகள் “உலக புகழ்பெற்ற ஒரு இசை மேதைக்கு நீங்கள் தரும் மரியதை இதுதானா?” என்று கேட்டு சத்தம் போட்டனர். உடனடியாக அந்த இடத்துக்கு வந்த உயர் அதிகாரிகள் நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டு இளையராஜாவை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சோதனை என்ற பெயரில், இளையராஜா அவமதிக்கப்பட்டார் என ஒரு தரப்பிலும்; இது வழக்கமான சோதனை நடைமுறை என அதிகாரிகள் தரப்பிலும் கூறப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விவகாரத்தின் இறுதியில், இளையராஜா தேங்காயுடன் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.
இப்பிரச்னை குறித்து கார்த்திக் ராஜா கூறுகையில், தேங்காயை கொண்டு செல்ல விடாமல் தடுத்த விமான நிலைய அதிகாரிகள், இறுதியில் வருத்தம் தெரிவித்தனர், என்றார்.