'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு ரஜினி, கமல் ஆகிய இருவரும்தான் இருதுருவங்களாக இருந்தனர். அந்த காலகட்டத்தில் நடித்து வந்த சில காமெடியன்களில் ஒய்.ஜி.மகேந்திரனும் ஒருவர். தற்போதும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் அவர், அவ்வப்போது நாடகங்களும் நடத்தி வருகிறார். அதேபோல் அவரது மகள் மதுவந்தியும், பெருமாளே உள்பட சில மேடை நாடகங்களை தயாரித்து, நடித்தும் வந்தார். ஆனால் இதுவரை சினிமா பக்கம் வராத அவர் தற்போது இரண்டு படங்களில் நடிக்கிறார்.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்துள்ள தர்மதுரை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கும் மதுவந்தி, தற்போது ஆர்யா, கேத்ரின் தெரசா நடித்து வரும் கடம்பன் என்ற படத்திலும் ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம். சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகர்களெல்லாம் தங்களது வாரிசுகளை சினிமாவில இறக்கி விட்டு வந்தபோதும், ஒய்.ஜி.மகேந்திரன் மட்டும் தனது மகளை நாட கங்களில் கவனம் செலுத்த வைத்திருந்தார். ஆனால் அவர் நாடகங்களில் நடித்து வரும் செய்தி வெளியானதை அடுத்து அவருக்கு சினிமாவில் இருந்து வாய்ப்புகள் தேடிச்செல்ல இப்போது என்ட்ரி கொடுத்துள்ள மதுவந்தி, கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பாராம்.