'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28 படத்தில் அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. அந்த படத்தில் அவருடன் ஜெய், பிரேம்ஜி, விஜய் வசந்த், நிதின் சத்யா என பலர் நடித்தனர். அவர்களில் மிர்ச்சி சிவாவின் நடிப்பு பேசும்படியாக இருந்ததால், மீடியாக்கள் அவரை குறிப்பிட்டு எழுதின. விளைவு, அதன்பிறகு கவனிக்கப் படும் நடிகரானார் மிர்ச்சி சிவா. அடுத்தபடியாக தமிழ்ப்படம், சரோஜா, கல கலப்பு, தில்லுமுல்லு என பல படங்களில் நடித்து ஒரு இடத்தை பிடித்து விட்டார். தற்போது மீண்டும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தான் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கும் மிர்ச்சி சிவா, நானும் இன்றைக்கு கோலிவுட்டில் ஒரு நடிகனாக இருக்கிறேன் என்றால் அதற்கு பத்திரிகைகள்தான் முக்கிய காரணம். சென்னை-28 படத்தில் எனது நடிப்பை வெகுவாக பாராட்டி எழுதினார்கள். அதனால்தான் அதற்கடுத்து சரோஜா, தமிழ்ப்படம் என இரண்டு படங்களில் ஷோலோ ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பினை பெற்றேன். ஆக, மீடியாக்கள் நினைத்தால் ஒரு நடிகனை உருவாக்க முடியும் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்கிறார் மிர்ச்சி சிவா.