பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பப்பாளி, சதுரங்க வேட்டை படங்களில் நடித்தவர் நடிகை இஷாரா. இவர் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தில் நடித்து வந்தார். இதில் கல்லூரி அகில் ஹீரோவாக நடிக்கிறார், கெவின் ஜோசப் இயக்குகிறார். ஜோசப் லாரன்ஸ் தயாரிக்கிறார். சில நாட்கள் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது “இஷாரா எங்கள் படத்தில் நடிக்காமல் தலைமறைவாகிவிட்டார்” என்று தயாரிப்பாளர் ஜோசப் லாரன்ஸ் புகார் கூறியுள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: இஷாராவை 28.02.2016 அன்று 4 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி 75 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். ஒப்பந்தத்திற்கு பிறகு படப்பிடிப்பை நடத்தினோம். நங்கள் கேட்டது 20 நாட்கள் தான். ஆனால் இஷாரா இரண்டே நாட்கள் தான் தேதி கொடுத்தார். அவர் இல்லாத காட்சிகளையும் படமாக்கினோம். அவர் பங்குபெற்ற இரண்டு நாட்களுமே அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதற்கு பிறகு அவரிடம் தொடர்புகொண்டு தேதி கேட்டதற்கு துபாயில் இருக்கிறேன், கேரளாவில் இருக்கிறேன் வேறு படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று வாட்ஸ் ஆப்பில் தான் பதில் கூறினார். தொடர்ந்து கேட்டபோது, என்னிடம் டைரக்டர் சொன்ன கதைவேறு, எடுக்கும் கதை வேறு என்று நழுவலாக பதில் சொன்னார். சில சமயங்களில் யாரோ ஒரு ஆண் குரல்தான் வரும் இதோ கூப்பிட சொல்கிறோம் என்று சொல்லி அதோடு போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிடும். நங்கள் கதையில் ஏதாவது திருத்தும் இருந்தால் சொல்லுங்கள் மாற்றிக் கொள்கிறோம் என்றோம்.
இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்பார். தேதி கொடுப்பார் ஆனால் சொன்ன தேதியில் படப்பிடிப்பிற்கு வரவே இல்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுவிட்டோம். அவரால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம்.
வேறு வழி இல்லாமல் கேரளாவில் உள்ள நடிகர் சங்கம் வரை சென்று முறையிட்டோம். அவர்களுக்கும் இஷாரா தரப்பில் சரியான பதில் தரப்பட வில்லை. இப்படியெல்லாம் தயாரிப்பாளர்களை வாட்டி வதைக்கிற இது மாதிரி நடிகைகளை நம்பித்தான் தமிழ் சினிமா பல கோடிகளை முதலீடு செய்கிறது அவர்களது முதலீட்டில் விளையாடும் புதியவர்களின் கனவுகளில் வெந்நீர் ஊற்றும் இது மாதிரியான நடிகைகளை சட்டத்தின் முன் நிறுத்துவது தான் சரி என்று முடிவெடுத்திருக்கிறோம். விரைவில் அதற்கான ஏற்பாடு செய்ய உள்ளோம்- இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் கேட்க இஷாரா தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நாட் ரீச்சபிளாக இருந்து. அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது “இஷாராவிடம் இயக்குனர் சொன்ன கதை வேறு. ஆனால் எடுத்த கதை வேறு. இதுவரை கிளாமராக நடித்திராத இஷாராவுக்கு ஏராளமான கிளாமர் காட்சிகள் வைத்திருந்தார்கள். இது படப்பிடிப்புக்கு சென்ற பிறகுதான் தெரிந்தது. படப்பிடிப்பையும் அவர்கள் சொன்ன தேதியில் நடத்தவில்லை. திடீர் திடீரென சூட்டிங் வைத்து அழைத்தார்கள். அதனால் படத்தில் நடிக்காமல் இஷாரா ஒதுங்கிக் கொண்டார். அவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால் நாங்களும் அதை சந்திப்போம். அப்போது இன்னும் சில உண்மைகளை சொல்ல வேண்டியது வரும்” என்கிறார்கள்.