ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கானும், சல்மான் கானும் 'பிக் பாஸ் 9' என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவுக்கான புரமோசனில் நடித்தார்கள். கோவில் போன்ற செட்டில் இருவரும் செருப்பு அணிந்து நடித்தனர். இதை எதிர்த்து வக்கில் கவுரப் குலாட்டி என்பவர் டில்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
‛‛‛ஷாருக்கானும், சல்மான்கானும் கோவிலுக்குள் ஷூ அணிந்து நடித்ததன் மூலம் இந்து மத உணர்வுகளை அவமதித்து விட்டார்கள். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. போலீசார் நேற்று பதில் மனுவை தாக்கல் செய்தனர். அதில் “ஷாருக்கானும், சல்மான் கானும் ஷூ அணிந்து நடித்து கோவிலில் அல்ல. கோவில் போன்று அமைக்கப்பட்ட செட்டுதான். அதற்கு புனித தன்மை எதுவும் கிடையாது” என்று தங்கள் மனுவில் தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.