'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியாங்கா சோப்ராவின் தாய் மது அசோக் சோப்ராவின் பூர்வீகம் கேரள மாநிலம் பொன்குன்னம். பிரியங்காவின் பாட்டி மேரி அகவுரி பொன்குன்னத்திலும், மும்பையிலும் மாறி மாறி வசித்து வந்தார். 92 வயதான மேரி அகவுரி கடைசியாக மும்பையில் பிரியங்கா சோப்ராவுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மேரி அகவுரி நேற்று முன்தினம் மும்பையில் காலமானார். தான் மரணம் அடைந்தால் தன் உடலை சொந்த ஊரில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இதையொட்டி மேரி அகவுரியின் உடல் விமானம் மூலம் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டு பொன்குன்னத்தில் உள்ள பூர்வீக வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்பு அங்குள்ள தேவாலயத்தில் இறுதி சடங்குகள் நடந்தது. இதற்காக கேரளாவுக்கு வந்த பிரியங்கா சோப்ரா பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். பின்னர் அவர் மும்பை கிளம்பிச் சென்றார்.