தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்ப, அப்படத்தின் நாயகியை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சதுரங்க வேட்டை படத்தில் நாயகியாக நடித்தவர் இஷாரா. கேரளாவைச் சேர்ந்த இவர், அகில் நாயகனாக நடிக்கும், எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். ஜோசப் லாரன்ஸ் இப்படத்தை தயாரிக்க, கெவின் ஜோசப் இயக்குகிறார். இப்படத்தில், ஒருசில நாட்கள் நடித்த இஷாரா திடீரென படப்பிடிப்புக்கு வராமல், தலைமறைவாகி விட்டதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்தில் நடிக்க, நான்கு லட்சம் ரூபாய் சம்பளம் பேசி, 75 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். படப்பிடிப்புக்காக நாங்கள், 20 நாட்கள், கால்ஷீட் கேட்ட நிலையில், இரண்டு நாட்கள் மட்டுமே இஷாரா ஒதுக்கினார்.
அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மேலும் எடுக்க வேண்டியதால், அவரை தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் எங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவதோடு, படப்பிடிப்பிலும் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார். ஒவ்வொரு முறையும் போனில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், வெளியே இருப்பதாக கூறுகிறார். சில மணி நேரம் கழித்து, தொடர்பு கொண்டால், அவரது போன், சுவிட்ச் ஆப் ஆகி விடுகிறது. அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் கூட தெரியவில்லை. அவரால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள நடிகர் சங்கம் வரை சென்று முறையிட்டும், இதுவரை பலனில்லை. இப்பிரச்னையை, கோர்ட் வரை கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.