போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் தொடரி. தனுஷ் நாயகனாக நடித் துள்ள இந்த படத்தை பிரபுசாலமன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதியிருக்கிறார். மேலும், தனுசுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் தம்பிராமைய்யா, இமான் அண்ணாச்சி, கருணாகரன், கும்கி அஸ்வின் உள்பட பலர் நடித்துளளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை 10 மணி அளவில் சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.தாணு, பார்த்திபன், கஸ்தூரிராஜா, செல்வராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் தனுஷ் பேசுகையில், இந்த படம் சமப்ந்தமாக என்னை பிரபுசாலமன் சந்திக்க வந்தபோது நான் கதையைகூட கேட்கவில்லை. படத்தில் நடிக்கத் தொடங்கி 4 நாட்களுக்கு பிறகுதான் ஒருநாள் கேரவனுக்குள் வைத்து கதை கேட்டேன். ரொம்ப திருப்தியாக இருந்தது. கதையை கேட்காமலேயே கால்சீட் கொடுத்திருந்தபோதும் அதன்பிறகு அவர் சொன்ன கதை பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.
மேலும், இந்த படத்தில் நான் பைட் சீனில் ரயிலில் தொங்கியபடி நடித்ததாகவும், டூப் பயன்படுத்தவில்லை என்று சென்னார்கள். ஆனால் நான் டூப் நடிகர்கள் செய்வதில் நூற்றில் ஒரு சதவிதம்தான் செய்தேன். அதோடு, இந்த படத்தில் என்னை விட கீர்த்தி சுரேஷ்க்குத்தான் பெரிய வேடம். ரொம்ப அற்புதமாக நடித் திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் இன்னும் பெரிய உயரத்துக்கு சென்று விடுவார். இந்த படத்தைப்பொறுத்தவரை நானாக எதுவும் பெருசாக செய்யவில்லை. பிரபுசாலமன் என்ன சொன்னாரோ அதன்படிதான் செய்தேன். அதனால் எல்லா கிரிடிட்டும் அவரையே சேரும்.
அதோடு, என் ரசிகர்கள் என்னை ரொம்ப உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்களை மனதில் கொண்டுதான் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று உழைக்கிறேன். மேலும், அவர்கள் சினிமாவுக்கே முதலிடம் கொடுக்கக் கூடாது. முதலில் தங்களது குடும்பத்தை கவனிக்க வேண்டும். அப்பா-அம்மா, குடும்பம்தான் முக்கியம். அதன்பிறகுதான் சினிமா. என்னைக்கேட்டால் எனது அப்பா-அம்மா நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரார்த்திக்கிறார்கள். அதனால்தான் எனக்கு மென்மேலும் வெற்றி வருகிறது. எப்போதுமே நம்முடைய இன்பம் துன்பம் இரண்டிலும் இருக்கப்போகிறவர்கள் அவர்கள்தான். அதனால் குடும்பத்துக்கே எப்போதும் முதலிடம் கொடுங்கள்.
இவ்வாறு தனுஷ் பேசினார்.