ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்த படம் கத்தி. விவசாயிகளின் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அப்படம் வெற்றி பெற்று அஞ்சான் தோல்வியில் சோர்ந்து போயிருந்த சமந்தாவை உற்சாகப்படுத்தியது. அதையடுத்து அவரது கோலிவுட் மார்க்கெட்டும் எகிறியது. இந்தநிலையில், தெலுங்கில் சிரஞ்சீவி கத்தி படத்தின் ரீமேக்கில் நடிப்பதை அறிந்த சமந்தா அந்த வேடத்தில் நடிக்க முயற்சி எடுத்து வந்தார். ஏற்கனவே அந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது என்றொரு பேச்சு இருந்தபோதும், தமிழ்ப்பதிப்பில் நடித்த நடிகை என்கிற உரிமையுடன் கல்லெறிந்து வந்தார் சமந்தா.
ஆனால், சிரஞ்சீவிக்கு சமந்தா பொருத்தமாக இருக்க மாட்டார் என்று இப்போது தீபிகா படுகோனேயிடம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். சிரஞ்சீவி நடிக்கும் 150-வது படம் என்பதோடு, அரசியலில் நுழைந்து இந்திய அளவில் பிரபலமாகி விட்ட பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படம் என்பதால் அப்படத்தை இந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அதனால் ஒரு பிரபல இந்தி நடிகை படத்தில் இருந்தால் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என்பதால் தீபிகா படுகோனேயிடம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். இந்த சேதியறிந்து செம அதிர்ச்சியில் இருக்கிறாராம் சமந்தா.