'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
சந்தானம் காமெடியனாக வலம்வந்து கொண்டிருந்தபோது, சில ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதோடு ஆர்யா, உதயநிதி உள்ளிட்ட சிலர் அவரை விடாமல் பிடித்து வைத்திருந்தனர். அப்படி அவர்களுடன் சந்தானம் நடித்த படங்களும் ஹிட்டடித்து வந்தன. ஆனால், சமீபகாலமாக சந்தான மும் அவர்களை மாதிரியே ஹீரோ அரிதாரம் பூசி விட்டதால் அவர்களது படங்களில் நடிக்க மறுத்து விட்டார். தன்னை சினிமாவுக்கு கொண்டு வந்த சிம்பு கேட்டுக்கொண்டதால் இது நம்ம ஆளு படத்தில் சில காட்சிகளில் மட்டும் தோன்றி நடித்தார்.
மேலும், தில்லுக்குத்துட்டு படத்தை முடித்து விட்டு, சர்வர் சுந்தரம் படத்தில் நடித்து வரும் சந்தானம், தனது நட்பு வட்டார நடிகர்களான ஆர்யா,உதயநிதியின் படங்களில் தற்போது நடிக்காதபோதும், அவர்களை சந்திக்க தவறுவதில்லையாம். எப்போதும் போல் அவர்களை சந்தித்து திரைக்குப்பின்னால் நட்பு வளர்த்து வருகிறாராம். அதோடு அவர்கள் தங்களது படங்கள் வெளியாகும்போது நடத் தும் விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறாராம் சந்தானம். அப்போது வழக்கம்போல் அவர்கள் அரட்டையடித்து மகிழ்ச்சியை கொண்டாடு கிறார்களாம்.