தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சாகசங்களின் மொத்த வடிவமாக மோகன்லால் நடிக்கும் 'புலி முருகன்' படம் உருவாகியுள்ளது. சண்டை காட்சிகளுக்கே டூப் போட விரும்பாத மோகன்லால், சாகச காட்சிகளுக்கு மட்டும் டூப் போடுவாரா என்ன..? அதனால் தான் படத்தில் பிரதான இடம்பெற்றுள்ள கதாபாத்திரமான புலியுடன் இணைந்து நடித்துள்ளார் மோகன்லால்.. அதுமட்டுமல்ல, கேரளாவின் அடர்ந்த காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தவேண்டி வந்தபோது காட்டு யானைகளின் துரத்தலுக்கு ஆளானதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டுள்ளார் மோகன்லால்.
அதாவது காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்த முடிவுசெய்த இயக்குனர் வைசாக், விடியற்காலை ஐந்து மணிக்கே படப்பிடிப்பை துவங்கி விடுவாராம். காரணம் அப்போதுதான் இருள் மறைந்து காட்டு விலங்குகள் குறிப்பாக காட்டு யானைகள் வெளியே வர ஆரம்பிக்குமாம். அப்போது படம்பிடித்தால் தான் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் என்பது வைசாக்கின் தீமானம். அப்படி ஒரு நாள் காட்சிகளை படமாக்கி கொண்டு இருந்தபோது திடீரென காட்டு யானைகள் படக்குழுவினரை நோக்கி ஓடிவர ஆரம்பித்ததாம். ஒரு வழியாக சாமர்த்தியமாக தப்பித்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றார்களாம் படக்குழுவினர். நிஜத்தைப்போலவே படத்திலும் த்ரில்லிங் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள் படக்குழுவினர்.