ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்திற்குப் புதிதாக வரும் இயக்குனர்கள் படங்களை சிறப்பாக எடுக்கிறார்களோ இல்லையோ, சுமாரான, மோசமான படத்தை எடுத்தால் கூட அதைச் சிறந்த படம் போன்ற தோற்றத்தை உருவாக்குவதில்தான் அதிக முனைப்புடன் இருக்கிறார்கள். இதற்காகவே ஒரு குழுவை உருவாக்கி வைத்து தங்களைப் பற்றியும், தங்களது படைப்பைப் பற்றியும் பாராட்ட வைக்கிறார்கள். தாங்கள் செய்த தவறுகளைக் கூட மறைக்கும் திறமையை நன்றாகவே வளர்த்து வைத்துள்ளார்கள்.
இப்படி ஒரு விவாகரத்தில் இப்போது இறைவி படத்தின் இயக்குனர் சிக்கியுள்ளார். இந்தப் படத்தில் தயாரிப்பாளர்களையும், தமிழ் இன உணர்வாளர்களையும் கார்த்திக் சப்பராஜ் அசிங்கப்படுத்தியுள்ளார் என அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனது படைப்பைப் பற்றிப் பேச வேண்டுமென அவர் வேண்டுமென்றே கூட இப்படிச் செய்திருக்கலாம் என்றும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
படத்தில் இயக்குனராக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் முடங்கிப் போன படத்தின் பெயர் மே 17. அதோடு ஒரு காட்சியில் தமிழ் தமிழ் என பேசறவங்களுக்கு சரியான செருப்படி கொடுத்தீங்க என்றதொரு வசனமும் தமிழ் இன உணர்வாளர்களை மிகவும் கோபப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்ப் படம் எடுத்துக் கொண்டு தமிழர்களையே கேவலப்படுத்துவதா என அவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
அதோடு எஸ்.ஜே.சூர்யாவின் படம் முடங்கிப் போவதற்குக் காரணமாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தான் இருக்கிறார் என படத்தில் காட்சிகள் உள்ளன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இதற்கு முன் இயக்கி வெளிவந்த ஜிகர்தண்டா படம் வெளியீட்டிற்கு முன்னதாக அவருக்கும் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும், தற்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவரான கதிரேசனுக்கும் இடையே பிரச்சனை இருந்தது. அதை மனதில் வைத்து இந்த இறைவி படத்தில் வேண்டுமென்றே காட்சிகளை வைத்துள்ளார் என்று தயாரிப்பாளர்களும் கொதித்துப் போயுள்ளனர்.
இறைவி படத்தில் உள்ள இந்த விவகாரங்கள் பற்றி இரண்டொரு நாளில் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.