ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிரஞ்சீவியின் 150வது படத்தின் பூஜைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகவுள்ளது. தமிழில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய இப்படத்தை தெலுங்கில் இயக்குனர் விவி விநாயக் இயக்கவுள்ளார். சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக அனுஷ்கா அல்லது நயன்தாரா நடிக்கக் கூடும் என கூறப்பட்டது.
தற்போது இருவரும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் பாலிவுட் நாயகி தீபிகா படுகோனேவை இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கோள்ளப்பட்டு வருகின்றாதாம். தீபிகா கேட்கும் சம்பளத்தைத் தரவும் தயாராக இருப்பதாக ராம் சரண் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றாராம்.