‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
என் மகன் மதன் என்ன ஆனார் என்பது தெரியாமல் மன உளைச்சலில் இருக்கிறோம். ஆனால், அவரை பற்றி தவறான செய்திகள் வெளிவருகின்றன. என் மகனை கண்டுபிடிக்க உதவுங்கள், என, வேந்தர் மூவீஸ் பட நிறுவனர் மதனின் தாய் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில், நேற்று மதனின் தாய் தங்கம் கூறியதாவது:என் மகன் என்ன ஆனார் என்பதே தெரியாத நிலையில், அவரை பற்றி தவறான செய்திகள் வெளி வருகின்றன. உண்மையான செய்திகளை விசாரித்து வெளியிடுங்கள். மதனை நண்பர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முதல்வர் தனி பிரிவிற்கும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மதன் என்றால், எஸ்.ஆர்.எம்., - எஸ்.ஆர்.எம்., என்றால் மதன் என்று இருந்தவர் என் மகன். அவர் மாயமானது தொடர்பாக பாரிவேந்தரை சந்திக்க சென்றபோது, அவரையும், அவரது மகன் ரவி பச்சமுத்துவையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லூயில், சீட் பெற்று தருவதில் மதன் முறைகேடு செய்ததாக புகார்கள் வருகின்றன. எட்டு ஆண்டுகளாக அவர் மீது இதுபோன்ற புகார்கள் வந்துள்ளதா? என் மகனை எஸ்.ஆர்.எம்., கைவிட்டதற்கு காரணம் தெரியவில்லை. பாரிவேந்தரை என் மகன் கடவுளாக பார்த்தார். பூஜை அறையில், கடவுளுக்கு நிகராக அவர் படத்தை வைத்திருந்தார். என் மகனை கண்டுபிடிக்க பத்திரிகைகள், ஊடகங்கள் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதனின் தாயுடன், அவரது கணவர் பாலகிருஷ்ணன், மதன் மனைவி சுமலதா, அவரது மகன் ஆகியோர் உடன் இருந்தனர்.