இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சின்ன ரோல், பெரிய ரோல் என்கிற வித்தியாசமெல்லாம் பார்க்க தெரியாது மலையாள நடிகை அனுஸ்ரீக்கு.. ஆனால் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்வதாக இருக்கவேண்டும் அவ்வளவுதான்.. அந்த தைரியம் தான் 'இதிகாசா' படத்தில் பெண்ணாக இருந்துகொண்டே ஆணாக அவரை நடிக்க வைத்தது.. 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் பஹத் பாசிலை உருகி உருகி காதலித்துவிட்டு, அப்பா பார்த்த கவர்மென்ட் மாப்பிளையை திருமணம் செய்துகொண்டு போகும் கேரக்டரில் எளிதாக பொருந்த வைத்தது. அந்த துணிச்சல் தான் இப்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஒப்பம்' படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரையும் வாங்கி தந்துள்ளது.
மலையாள நடிகைகளை பொறுத்தவரை இரண்டு ஆசைகள் அவர்களுக்கு நிச்சயம் உண்டு. ஒன்று மோகன்லாலுடன் நடிக்க வேண்டும்.. இன்னொன்று போலீஸ் வேடத்தில் நடிக்கவேண்டும். இது இரண்டுமே அனுஸ்ரீக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தது போல ஒரே படத்தில் கிடைத்துவிட்டது தான் ஆச்சர்யம். இந்தப்படத்தில் புதிதாக பொறுப்பேற்ற அசிஸ்டன்ட் கமிஷனர் வேடத்தில் நடித்துள்ளார் அனுஸ்ரீ.