‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவது புதிதில்லை, எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார். பாக்யராஜ் தாயக மறுமலர்ச்சி கழகத்தை தொடங்கினார். டி.ராஜேந்தர் லட்சிய தி.மு.வை தொடங்கினார். கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கினார். சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார்.
இந்த வரிசையில் கருணாசும் விரைவில் அரசியல் கட்சி தொடங்குகிறார். கருணாஸ் தற்போது முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் அ.தி.மு.க ஆதரவுடன் திருவாடணை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது அமைப்பு ஜாதி அமைப்பாக இருப்பதால் அதனை அரசியல் கட்சியாக மாற்ற இருக்கிறார்.
இதுகுறித்து கருணாஸ் கூறியிருப்பதாவது: ராமதாஸ், திருமாளவன், சரத்குமார் உள்ளிட்ட பலர் ஜாதியின் பின்புலத்தில் கட்சி நடத்தினாலும் அவர்கள் அரசியல் கட்சிகளாக பார்க்கப்படுகிறார்கள். தேர்தல் நேரத்தில் 6 கட்சி கொடியை பயன்படுத்திய என்னால் என் அமைப்பின் கொடியை பயன்படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் ஜாதி அமைப்பு என்ற முத்திரை. எனவே முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை பதிவு பெற்ற அரசியல்கட்சியாக மாற்ற முடிவெடுத்திருக்கிறேன். நான் அனைவருக்கும் பொதுவானவனாக இருக்க விரும்புகிறேன் என்கிறார் கருணாஸ்.