தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குடும்ப பிரச்சினை காரணமாக சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அஞ்சலி இப்போது தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கன்னடத்தில் தர்ஷன் ஜோடியாக 'சக்ரவர்த்தி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனை சிந்தன் இயக்குகிறார், அனாஜி நாகராஜ் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு மைசூரில் தொடங்கியது. தர்ஷன், அஞ்சலி பாடல் காட்சியை முதலில் எடுக்க திட்டமிட்டிருந்தனர். முதல் நாள் படப்பிடிப்பில் பூஜை முடிந்து காட்சியை எடுப்பதற்காக இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், தர்ஷன் உள்ளிட்ட நடிகர்கள், தயாரிப்பாளர் என 100 பேர் வரை அஞ்சலிக்காக காத்திருந்தனர். பெங்களூருவிலிருந்து சாவகாசமாக புறப்பட்ட அஞ்சலி 4 மணி நேரம் தாமதாமாக வந்தார். பொறுத்துப் பார்த்த தர்ஷன் படப்பிடிப்பிலிருந்து கிளம்பி விட்டார்.
தாமதமாக வந்த அஞ்சலியை தயாரிப்பாளரும், இயக்குனர்களும் கடிந்து கொண்டார்கள். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அஞ்சலி அங்கிருந்து கோபமாக திரும்பிச் சென்று விட்டார். தற்போது 'சக்ரவர்த்தி' படத்திலிருந்து அஞ்சலியை நீக்கிவிட்டாகவும் அவருக்கு பதிலாக தீபா சன்னிதியை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பில் அஞ்சலியால் ஏற்பட்ட நஷ்டத்தை அவரிடம் பெற்றுத் தருமாறு தயாரிப்பாளர் கன்னட தயாரிப்பாளர் சங்கதில் புகார் செய்ய முடிவு செய்திருக்கிறார்.