மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தலைமறைவாகி உள்ள, வேந்தர் மூவிஸ் பட அதிபர் மதனை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது முதல் மனைவி, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அத்துடன் பண மோசடி செய்யும் அளவுக்கு மதன் தரம் தாழ்ந்தவர் அல்ல என்று கூறியுள்ளார்.
பிரபல சினிமா பட தயாரிப்பாளரான மற்றும் வினியோகஸ்தருமான, வேந்தர் மூவிஸ் மதன், மே, 28ல், காசியில் சமாதி அடையப் போவதாக, கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார். அவரை, அவரது நண்பர்கள், உறவினர்கள், காசி உள்ளிட்ட இடங்களில் தேடி வருகின்றனர். ஆனால், அவர் எங்கு இருக்கிறார்; என்ன ஆனார் என தெரியவில்லை. வாரணாசி போலீசாரும் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தலைமறைவான மதனின் இரண்டாவது மனைவி சுமலதா, மதனின் தாய் தங்கம் ஆகியோர் புகார் அளித்தனர். இதற்கிடையில், நேற்று, சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் மதனின் முதல் மனைவி சிந்து, போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனிடம் புகார் அளித்தார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: அண்ணா நகர் கிழக்கு, நான்காவது அவென்யூவில், கணவர் மதன் மற்றும் மகள் வேதிகா ஆகியோருடன் வசித்து வந்தோம். என் கணவர், சினிமா உலகில் பிரபலமானவர்; பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். மே, 28, பி.எம்.டபுள்யூ., காரில், அலுவலகம் சென்று வருவதாக கூறிச்சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவர் எழுதி வைத்து விட்டு சென்றதாக, கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
என் கணவர் சென்ற கார், சென்னை விமான நிலையம், பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அறிகிறேன். எங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்து விட்டோம். அவர் எங்கு இருக்கிறார்; என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. அவரை கண்டு பிடித்து தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறி உள்ளார்.
நான் தான் முதல் மனைவி!
மதனின் மனைவி சிந்து கூறியதாவது: எங்கள் பூர்வீகம் கேரளா. நான், என் கணவருக்கு சட்டரீதியான முதல் மனைவி. எங்களுக்கு பிளஸ் 1 படிக்கும் மகள் உள்ளார். சுமலதா, என் கணவரின் இரண்டாவது மனைவி. அவருக்கு எல்.கே.ஜி., படிக்கும் மகன் உள்ளார். என் கணவர் பற்றி ஊடகங்களில், வெவ்வேறு மாதிரியான வதந்திகள் பரவி வருவது வேதனை அளிக்கிறது. அவர், பண மோசடி செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்தவர் அல்ல. மேலும், அவருக்கு பல மனைவிகள், கல்லூரி மாணவியுடன் சென்று விட்டார் என, பிரச்னையை திசை திருப்ப சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.