இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை என 3 படங்களின் மூலம் தனக்கென தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்தவர் வெற்றி மாறன். தற்போது தனுஷ் நடிப்பில் 'வடசென்னை' என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடந்து வருகிறது. வடசென்னைக்கு பிறகு வெற்றிமாறன் விவசாயிகள் தற்கொலை பற்றிய ஒரு படத்தை இயக்க இருக்கிறார். விசாரணை படம் ஆட்டோ டிரைவர் சாந்தகுமார் எழுதிய 'லாக்அப்' என்ற நாவலை தழுவியது. அதேபோல கோட்டா நீலிமா என்ற பத்திரிகை நிருபர் எழுதிய 'ஷூஸ் ஆப் தி டெட்' என்ற நாவலை மையமாக வைத்து படம் இயக்க இருக்கிறார்.
இது விவசாயிகளின் தற்கொலை பற்றிய உண்மை சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட நாவல். மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தற்கொலை செய்வது குறித்து ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதிய நீலிமா அந்த அனுபவங்களை நாவலாக்கி இருக்கிறார். மித்யாலா என்ற பகுதியில் விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்கிறார்கள், அது அந்த தொகுதி எம்.பிக்கு பெரும் பிரச்சினையாகிறது.
விவசாயிகள் தற்கொலை சொந்த காரணங்களுக்காக நடக்கிறது என்பதாக காட்டிக் கொள்ள அவர் பல வில்லத்தனங்களை செய்கிறார். நிஜமாகவே விவசாயிகள் கடன் தொல்லையாலும், வறுமையாலும் சாகிறார்கள் என்பதை நிரூபிக்க கங்கிரி பத்ரா என்ற இளைஞர் போராடுகிறார். இருவரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் நாவலின் கதை.
இதை தமிழ்நாட்டுக்கு ஏற்றமாதிரி மாற்றி வெற்றி மாறன் படமாக எடுக்க உள்ளார். நாவலை திரைக்கதை வடிவமாக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.