நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
அஜீத், நயன்தாரா உள்ளிட்ட சிலர் தாங்கள் சம்பந்தப்பட்ட படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலேயே கலந்து கொள்வதில்லை. ஆனால் விஜயசேதுபதி தனக்கு துளியும் சம்பந்தமில்லாத படங்களின் ஆடியோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்த படக்குழுவினரை வாழ்த்துகிறார். அது மட்டுமின்றி, விழாக்களுக்கு தாமதமாக வர நேர்ந்தால், அதற்காக மேடையில் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறார். விஜயசேதுபதியின் இந்த பண்பு சினிமாக்காரர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அதுமட்டுமின்றி, தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகர்-நடிகைகளையும் அவர் முடிந்தவரை பாராட்டித்தள்ளுகிறார். அந்தவகையில், இறைவியில் தன்னுடன் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா மற்றும் அஞ்சலியின் நடிப்பை பெரிய அளவில் புகழ்ந்து பேசுகிறார் விஜயசேதுபதி. குறிப்பாக, எஸ்.ஜே.சூர்யா இறைவி படத்தில் மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்துள்ளார். குடிகாரன் கேரக்டரில் இவர் நடித்த மாதிரி இயல்பாக இதுவரை யாரும் நடித்ததாக எனக்கு தெரியவில்லை, அப்படியொரு பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார் என்று கூறும் அவர், இதுவரை அஞ்சலியை பல படங்களில் கிளாமராக பார்த்து ரசித்த ரசிகர்கள், இந்த படத்தில் அவரது குடும்பப்பாங்கான நடிப்பைப்பார்த்து ஆச்சர்யப்படுவார்கள். அப்படியொரு நடிகையாக இறைவியில் நடித்திருக்கிறார் அஞ்சலி என்றுஅவர்களை தனது நட்பு வட்டாரங்களில் பெருமையாக கூறி வருகிறார் விஜய சேதுபதி.