'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மரணத்தை தொடர்ந்து மணியின் உடலில் விஷம் கலந்திருப்பதை ஹைதராபாத்தில் இருந்து வந்த மெடிக்கல் ரிப்போர்ட் உறுதிப்படுத்திவிட்டது.. அதற்கு சில நாட்கள் முன்னதாகத்தான் கலாபவன் மணியின் தம்பியான ராமகிருஷ்ணனும் அவரது குடும்பத்தினரும் கலாபவன் மணியின் மரணத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் தயங்குவதை கண்டித்து ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்தனர். அதுமட்டுமல்ல, கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணன், தனது அண்ணனின் மரணம் திட்டமிடப்பட்ட கொலை என்றும் அதன்பின்னணியில் கலாபவன் மணியின் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.
இதில் போலீசாரால் ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்ட நடிகர் சாபுமோனை பற்றி அவர் குறிப்பிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.. இதனால் கடுப்பான சாபுமோன், ராமகிருஷ்ணன் என் மீது தொடர்ந்து தேவையில்லாத பழியை சுமத்தி வருகிறார். கலாபவன் மணி உயிரோடு இருந்த நாட்களில் அவரை சந்திக்க கூட அனுமதிக்காதவர் தான் இந்த ராமகிருஷ்ணன்.. கலாபவன் மணியின் மரணத்தால் நான் எந்த சொந்த சகோதரன் ஒருவரை இழந்து வாடுவதைப்போல இருக்கும் இந்த சூழலில் இவர் என்மீது அபாண்டம் சுமத்துவதை நிறுத்தவேண்டும் என கூறியுள்ளார்.. மேலும் இந்த வழக்கு விசாராணையில் போலீசாருக்கு தான் முழுதாக ஒத்துழைப்பு தருவதாகவும் கூறியுள்ளார் சாபுமோன்.