‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சில தினங்களுக்கு முன் நடிகை பிரியாமணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவரது காதல் கணவராக வர இருப்பவர் பெயர் முஸ்தபா ராஜ்.. தொழிலதிபரான இவருக்கும் பிரியாமணிக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் ஐ.பி.எல் மேட்ச்சின்போது பழக்கம் ஏற்பட்டு நட்பாகி, அது காதாலாக மாறி இன்று திருமண நிச்சயதார்த்தம் வரை எட்டியுள்ளது. இந்த மகிழ்ச்சியான விஷயத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக தனது நிச்சயதார்த்த போட்டோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பிரியாமணி. ஆனால் ஏன் தான் அந்த போட்டோவை பதிவிட்டோமோ என நொந்துபோன பிரியாமணி நேற்று அந்த போட்டோவை தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்தே அகற்றிவிட்டார்..
காரணம் அவரது திருமண அறிவிப்புக்கு வாழ்த்து சொன்னவர்களை விட அந்த போட்டோவை வைத்து கிண்டலடித்தவர்களே அதிகமாக இருந்தனராம். குறிப்பாக மோசமான வார்த்தைகளில் கமெண்ட்டுகள் தொடர்ச்சியாக வந்து விழுகவே, தன்னை பின்தொடர்பவர்களில் இவ்வளவு பேர் மோசமானவர்களாக இருக்கிறார்களா என என அதிர்ச்சியானதால் தான் அந்த போட்டோவை அகற்றினாரம் பிரியாமணி.. மேலும் திருமணம் என்பது என் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான விஷயம்.. அதை இவ்வளவு மட்டமாக விமர்சிப்பீர்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை.. உங்களிடம் இருந்து வாழ்த்துக்களை எதிர்பார்த்த எனக்கு இது மிகவும் அதிர்ச்சி தருகிறது என வருத்ததுடன் கூறியுள்ளார் பிரியாமணி.