நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
கடந்த மாதம் 28ஆம் தேதி கேரளாவில் பெரும்பாவூர் பகுதியை செந்த சட்டக்கல்லூரி மாணவியான ஜிஷா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாடெங்கும் அதிர்ச்சியலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.. மகளை இழந்து மனம், உடல் இரண்டும் பாதிப்புக்கு ஆளான ஜிஷாவின் தயார் பெரும்பாவூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்... கடந்த சில தினங்களுக்கு முன் தான் நடித்த 'ஆடுபுலியாட்டம்' படத்தை பார்க்க பெரும்பாவூர் வந்த ஜெயராம், மருத்துவமனையில் இருந்த ஜிஷாவின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் தனது படவிழாவில் கலந்துகொண்டு பேசும்போது, தான் நடித்த 'ஆடுபுலியாட்டம்' படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தொகையை ஜிஷாவின் தாயாருக்கு நிவாரண நிதியாக வழங்குவதாகவும் அப்போது அறிவித்தார்.. அதன்படி நேற்று மீண்டும் பெரும்பாவூர் வந்து மருத்துவமனையில் ஜிஷாவின் தாயாரை சந்தித்த ஜெயராம், அவருக்கு உதவித்தொகையாக 2 லட்ச ரூபாயை வழங்கினர். ஜிஷா குடியிருந்த வீடு பாதுகாப்பற்ற சாதாரண வீடாக இருந்ததும் கூட, ஜிஷாவிற்கு தன்னை காப்பற்றிக்கொள்ள முடியாமல் போக காரணமாக அமைந்தது.. அதனால் ஜிஷாவின் தயார் அவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு நல்ல வீடு கட்டிக்கொள்வதற்காக இந்த தொகையை வழங்கியுள்ளார் ஜெயராம்.